6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

Share

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப் புலனாய்வு திணைக்களம் கண்டுபிடித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட இடம் இதுவென குறிப்பிடப்படுகிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா, பிள்ளையான் பிரிந்த பிறகு, இந்த முகாம் பிள்ளையானின் குழுவினரால் செயற்படுத்தப்பட்டு வந்துள்ளதாக தெரிய வருகிறது.

பேராசிரியர் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதியன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பும் போது கடத்தப்பட்டு, வெலிகந்தை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவர், சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த முகாமில் ஏராளமானோர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும், சித்திரவதை செய்யப்பட்ட பல நபர்களையும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தித்துள்ளதாகவும் மூத்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி மேலும் கூறியுள்ளார். இந்த முகாம் 2005 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களிடமும் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்துள்ளனர். முகாம் இருந்த காலத்தில், சித்திரவதைக்கு உள்ளானவர்கள் வலியால் அலறும் சத்தங்களை தொடர்ந்து கேட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்தம் தாங்க முடியாததாகவும், முகாமில் இருந்து அவ்வப்போது குப்பை நாற்றம் வீசுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். போர் முடிந்த பிறகு, விவசாயிகள் இந்த முகாமை சுற்றியுள்ள நிலத்தை நெல் பயிர் செய்கைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

எனினும் முகாம் உயரமான இடத்தில் அமைந்திருப்பதால் முகாம் இன்னும் பாதுகாப்பாக இருப்பதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். தற்போது குற்றப் புலனாய்வு பிரிவு அந்த இடத்தை கண்காணித்து வருகிறது.

இந்த முகாமில் தங்கியிருந்த பிள்ளையானின் தரப்புடன் தொடர்புடைய பலரையும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரித்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இந்த இடம் ஒரு சித்திரவதை முகாமாக நடத்தப்பட்டதாகவும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்தின் உடல் ஒரு ஓடையில் வீசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
articles2FRbYMLy7admFnw5slJVju
ஏனையவை

பாபா வங்காவின் 2026 கணிப்பு: உலகப்போர் 3 அபாயம் – அமெரிக்கா, சீனா மோதல் உச்சம்!

புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும்,...

articles2FyiS73wPBBTEPNSERwl9g
ஏனையவை

முன் பிள்ளைப் பருவ கல்வி: 2027 முதல் புதிய பாடத்திட்டம் அமல் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

முன் பிள்ளைப் பருவத்தினருக்குத் தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல்...

1742213297 ganemulla sanjeewa 6
ஏனையவை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேக நபர்கள் டிசம்பர் 5 வரை விளக்கமறியல் நீட்டிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் 5ஆம்...

thumbs b c 5027e373e0f532f509cd40063f3ea6cb
ஏனையவை

லிபியா போலல்லாமல், இலங்கையின் பழமையான ஜனநாயகத்தைப் பேண வேண்டும்” – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தல்!

இலங்கை ஆசியாவின் மிகப் பழமையான ஜனநாயகம் மிக்க நாடு என்றும், லிபியா அல்லது தற்போது அமைதியின்மையை...