2 14
ஏனையவை

அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக வழக்கு விசாரணை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Share

2012 ஆம் ஆண்டு கிரேக்க நிதி நெருக்கடி தொடர்பாக, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் மூன்று பிரதிவாதிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கிரேக்கத்தில் பொருளாதார சரிவுக்கான தெளிவான அறிகுறிகள் இருந்தபோதிலும், கிரேக்க பத்திரங்களில் பொது நிதியை முதலீடு செய்ததன் மூலம் இலங்கை அரசுக்கு 1.8 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய வழக்கை அக்டோபர் 10 ஆம் திகதியன்று விசாரிக்க திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று இடம்பெற்ற நீதிமன்ற அமர்வின் போது, பிரதிவாதிகளுக்கு எதிரான ஆவணங்கள், அவர்களுக்கு கையளிக்கப்படும் என்று அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...