10 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

Share

இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் வெற்றிடமாகவுள்ள, மூன்று வேலைப் பிரிவுகளுக்கான பதிவு இன்று(27) அதிகார பூர்வமாக ஆரம்பமாகும் என்று இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது. இலங்கை விமான பயணம்

இதன்படி, விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கடைசி திகதி, 2025 ஜூலை முதலாம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியகத்தின் தகவல்படி, இஸ்ரேலின் கட்டுமானத் துறையின் கீழ் புனரமைப்பு துணைத் துறையில் தகுதிவாய்ந்த இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கை விமான பயணம்

பொது புதுப்பித்தல் வேலை(General Renovation Work) பீங்கான் டைலிங் வேலை(Ceramic Tiling Work) பிளாஸ்டரிங் வேலை (Plastering Work ) என்பவற்றுக்கே விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இந்தத் தொழில்களில் பொருத்தமான அனுபவமுள்ள 25 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் முன்னர் இஸ்ரேலில் பணிபுரிந்திருக்கக்கூடாது அல்லது அங்கு உறவினர்கள் இருக்கக்கூடாது.

அத்துடன் அனைத்து நாடுகளுக்குமான, குறைந்தது மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும் கடவுச் சீட்டை வைத்திருக்க வேண்டும்.

கூடுதலாக, இந்த வேலை வகைகளில் முன்னர் இறுதி திறன் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு 63 மாத வேலைவாய்ப்பு ஒப்பந்த அடிப்படையில், மாத சம்பளம் 1,520 அமெரிக்க டொலர்கள் மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவுகளுடன் வழங்கப்படும்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 1
இலங்கைசெய்திகள்

சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை: வெள்ளப் பகுதிகளின் கண் தொற்றுகள் பரவும் அபாயம் – மக்கள் அவதானம்!

வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் தொற்றுகள் (Eye Infections) எளிதில் பரவக்கூடும்...

25 69340bc828c36
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவில் அதிர்ச்சி: 38 நோயாளிகளிடம் அத்துமீறிய மருத்துவர் மீது 45 பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு!

பிரித்தானியாவில் மருத்துவராகப் பணியாற்றிவந்த ஒருவர், 13 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் உட்பட 38 நோயாளிகளிடம் அத்துமீறியதாக...

25 69341a3e0ac8b
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி கோமா நிலை: தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது கீழே விழுந்தாரா? முரண்பட்ட தகவல்கள்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கும் மேலாகக் கோமா...