5 11
இலங்கைசெய்திகள்

பல கொலைச் குற்றச்சாட்டுக்களில் மீண்டும் சிக்கியுள்ள பிள்ளையான்

Share

கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் அதிகாரி மற்றும் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) மீது குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இந்த கொலைகள் 2005 மற்றும் 2007 ஆம் ஆண்டுக்கு இடையில் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தில் பணியில் இருந்த ஒரு பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றதாக பிள்ளையான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு மாகாணத்தில் ஒரு பணக்கார தொழிலதிபரையும், பிள்ளையானின் சொந்த அரசியல் கட்சி உறுப்பினரையும் கொன்றதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த கொலைகள் தொடர்பாக எதிர்வரும் நாட்களில் பிள்ளையான் விசாரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...