Untitled 1 Recovered Recovered 6
உலகம்செய்திகள்

பேச்சுவார்த்தைக்கு தயாரான ஈரான்! பெசேஷ்கியான் விடுத்துள்ள எச்சரிக்கை

Share

இஸ்ரேல் தம்மீது முதலில் தாக்குதல் நடத்தாவிட்டால் ஈரான் பதிலடி தாக்குதலை ஒருபோதும் நடத்தியிருக்காது என ஈரான் ஜனாதிபதி மசௌட் பெசேஷ்கியான்(Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார்.

ஈரான் தற்காப்பு நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ளும் என்றும், இஸ்ரேல் முதலில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் ஈரான் மோதலைத் தொடர்ந்திருக்காது எனவும், அவர் கூறியுள்ளார்.

இது, ஈரானின் இராஜதந்திர மற்றும் இராணுவ நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஈரான் பேச்சுவார்த்தை மேசைக்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதியின் இந்தக் கூற்று, ஈரான் தன்னை ஒரு தற்காப்பு நிலைப்பாட்டில் உள்ளதாகக் காட்ட முயல்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளே மோதலுக்கு முக்கிய காரணம் என்று வலியுறுத்துகிறது.

இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை குறைக்கவும், இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கலாம்.

ஆனால் இஸ்ரேலின் தொடர் நடவடிக்கைகள் இதற்கு தடையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...