25 684e8bb4788b1
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கூடுதலாக காட்டப்பட்டுள்ளது

Share

இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு அந்நிய செலாவணி கையிருப்புகள் சுமார் 1.4 பில்லியன் டொலர்களினால் மேலதிகமாக காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தகவல்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் உள்நாட்டு இணையதளமொன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையின் வெளிநாட்டு இருப்புகள் குறித்து சந்தேகங்கள்” எனும் தலைப்பிலான இந்த அறிக்கையில், சீனாவின் பீப்பிள்ஸ் வங்கியுடன் உள்ள சுமார் 1.4 பில்லியன்அமெரிக்க டொலர் அளவிலான நாணயப் பரிமாற்ற ஒப்பந்தம், சர்வதேச நாணய நிதியம் (IMF) வகைப்படுத்தும் விதிகளுக்கு ஏற்ப பரிசோதிக்கத்தக்க நிகர நிதி அல்ல என்று கூறப்பட்டுள்ளது.

IMF விதிகளின்படி, நிபந்தனையின்றி உடனடியாக பயன்படுத்தக்கூடிய சொத்துகளே நிகர நிதியாக (usable reserves) ஏற்கப்படும். ஆனால் இந்த சீன பரிமாற்றத்தில் பல கட்டுப்பாடுகள் உள்ளதால், அதனை பயன்பாட்டு நிதியாகக் கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 மே மாதத்தில், 6.3 பில்லியன் டொலர் இருப்பு உள்ளதாக மத்திய வங்கி அறிவித்தது. ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் IMF தரநிலைக்கு ஏற்ப சீன பரிமாற்றத்தை நீக்கினால், உண்மையான பயன்படுத்தக்கூடிய இருப்பு 4.9 பில்லியன் டொலர்களாக குறைகிறது.

2022 ஏப்ரல் முதல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள், வெளிநாட்டு நிதி இருப்புகளைத் தெரிவிக்கும் போது, இந்த சீன பரிமாற்றத்தையும் சேர்த்துக் கொண்டு பொருளாதார மீட்பு நிலை சாதகமாக உள்ளது என தவறான பார்வையை ஏற்படுத்தியதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் வரையறைக்கு இணையாகவே “பயன்படுத்தக்கூடிய நிதி” அளவை கணக்கிட வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுபோன்ற தவறான நிதி ஆவணங்கள் வெளிநாட்டு கடனளிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை குறைக்கும் என்றும், நிதி மேலாண்மையில் வெளிப்படைத்தன்மை பாதிக்கப்படும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சர்வதேசத்தின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ள இலங்கைக்கு இந்த அறிக்கை பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய சாத்தியம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FUK4fwSxpXY292Ae6yxC9
செய்திகள்உலகம்

மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ஒரே நாளில் இருமுறை அதிர்ந்ததால் மக்கள் அச்சம்!

மியன்மாரில் இன்று மாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும்...

court
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேருக்கு விளக்கமறியல்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை...

image 2f3d7cb265
செய்திகள்இலங்கைபிராந்தியம்

70 ரூபாய் குடிநீர் போத்தல் 100 ரூபாய்க்கு விற்பனை: கொழும்பு வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக...

penguin viral video 1769232930
உலகம்செய்திகள்

தனிமைப் பயணம்: இணையத்தைக் கலக்கும் நிகிலிஸ்ட் பென்குயின்! தத்துவமா? அல்லது அறிவியலா?

தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்து, பனிபடர்ந்த மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்லும் ஒரு சிறிய...