25 684a4607670bb
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெரும் ஆபத்தாக மாறும் நோய் – சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

Share

எதிர்வரும் வாரங்களில் அதிக மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்பதால், நாடு முழுவதும் டெங்கு தொற்றின் தீவிர பரவலை தடுக்க சுகாதார அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

நுளம்புகளின் இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளை கண்டறிந்து கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமூக மருத்துவர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆபத்தான விகிதத்தில் அதிகரிக்கவில்லை. எனினும் மழை தொடர்ந்தால் இது விரைவாக மாறக்கூடும், ஏனெனில் தேங்கி நிற்கும் நீர் நுளம்புகளுக்கு சிறந்த இனப்பெருக்க இடமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அப்புறப்படுத்தப்பட்ட கொள்கலன்கள் மற்றும் தேங்கி நிற்கும் நீர் நிலைகள் போன்ற நுளம்புகளின் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுவதில் கவனம் செலுத்தி, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கவும், தங்கள் வீடுகள் மற்றும் தோட்டங்களை தொடர்ந்து ஆய்வு செய்யவும் பொது விழிப்புணர்வு பிரசாரங்கள் முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை மற்றும் மூட்டு வலிகள் அல்லது தோல் வெடிப்புகள் போன்ற அறிகுறிகள் தோன்றினால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், உடனடியாக மருத்துவ உதவியை நாடவும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2FnSTUZZcRP8myiGgD1k41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவற்குழியில் மணல் டிப்பர் விபத்து: கிளிநொச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் தென்மராட்சி, நாவற்குழி பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கோர...

image b42613d114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு: மீண்டும் விசாரணையை ஆரம்பியுங்கள் – கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

கொழும்பு, பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் (All Saints’ Church) வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தின்...

1768450480 israel 6
செய்திகள்உலகம்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு...

MediaFile 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி முகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்!

கொழும்பு, காலி முகத்திடல் (Galle Face) வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...