25 6846f44e4fa83
உலகம்செய்திகள்

நாடு திரும்பும் அகதிகளுக்கான உதவி குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை: சந்தோஷ் ஜா

Share

இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்பும் அகதிகளுக்கான இருப்பிட மற்றும் வாழ்வாதார வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது அண்மையில் தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்து நாடு திரும்பிய 75 வயதுடைய முதியவர் ஒருவர் பலாலி விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் குறித்து இந்தியத் தூதுவரிடம் சுமந்திரன் எடுத்துரைத்தார்.

அதுமாத்திரமன்றி இந்திய அகதி முகாம்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்கு விண்ணப்பித்திருப்பது பற்றியும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதனைச் செவிமடுத்த இந்தியத் தூதுவர், மீண்டும் நாடு திரும்பும் அகதிகளுக்கு அவசியமான இருப்பிட மற்றும் வாழ்வாதார உதவிகளை இலங்கை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் எனவும், இது பற்றி அரசுடன் கலந்துரையாடியிருப்பதாகவும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
25 6849c5dfe0a82
உலகம்செய்திகள்

சீனாவுடன் அதிரடியாக ஒப்பந்தம் செய்த ட்ரம்ப்..! நடக்கவுள்ள மாற்றங்கள்

லண்டனில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...

25 684a2d1c7f215
இலங்கைசெய்திகள்

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதல்...

25 684a1d46ac31b
இந்தியாசெய்திகள்

இந்தியா – இலங்கை ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள சந்தேகம்

இந்தியாவின் இணக்கப்பாடு இன்றி இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அம்பலப்படுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக...

25 684a2b04cca7e
இலங்கைசெய்திகள்

வெலிகம சம்பவத்தின் போது தவறாக வழிநடத்தப்பட்ட அதிகாரிகள்

2023ஆம் ஆண்டு வெலிகம சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற தன்னையும் ஏனையவர்களையும் மூத்த பொலிஸ் அதிகாரிகள்...