25 6844fcdb271cf
சினிமாசெய்திகள்

மூன்று நாட்களில் உலகளவில் தக் லைஃப் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

நாயகன் தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். மணி ரத்னம் – கமல் கூட்டணியில் உருவான இப்படம் இன்று வரை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நாயகன் வெற்றியை தொடர்ந்து இருவரும் எப்போது மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

38 ஆண்டுகள் கழித்து தக் லைஃப் திரைப்படத்திற்காக இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்தது. இதனால் தக் லைஃப் படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு உண்டானது. இவர்களுடைய கூட்டணி மட்டுமின்றி முதல் முறையாக கமலுடன் சிம்பு இணைந்து நடித்தாலும் படத்தை ஆவலுடன் திரையில் காண ரசிகர்கள் காத்திருந்தனர்.

கடந்த ஜூன் 5ம் தேதி திரைக்கு வந்த தக் லைஃப் திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. ஒரு பக்கம் மோசமான விமர்சனம் இப்படத்திற்கு கிடைக்க, மறுபக்கம் நெட்டிசன்கள் இப்படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மூன்று நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 67 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளில் நல்ல வசூல் வந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் அப்படியே குறைந்துவிட்டது.

Share
தொடர்புடையது
MediaFile 3 8
பொழுதுபோக்குசினிமா

இலங்கை வந்தார் ‘இந்திய மைக்கேல் ஜாக்சன்’ பிரபு தேவா!

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரும், புகழ்பெற்ற நடன இயக்குநருமான பிரபு தேவா இன்று (30) இலங்கையை...

MediaFile 11
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,...

24 670f93e6eb8ad
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது: வாகன முறைகேடு தொடர்பாக CID நடவடிக்கை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இன்று (30) கைது...

25 6949732ef2e8e
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல்: ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்!

‘டித்வா’ (Titli) புயல் அனர்த்தத்தின் போது முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் மூலம் பொதுமக்களின்...