25 68444cc754912
இந்தியாஉலகம்செய்திகள்

கனடாவுக்கு வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்துள்ள மார்க் கார்னி

Share

கனடாவில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் பங்கேற்குமாறு, இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய பிரதமர் மார்க் கார்னி இந்த அழைப்பை, தொலைபேசி வாயிலாக விடுத்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், இரண்டு நாடுகளுக்கும் இடையில் மோசமான ராஜதந்திர முறுகல் ஏற்பட்டிருந்த நிலையிலேயே இந்த அழைப்பு செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியா ஜி7 நாடுகளின் உறுப்பினர் அல்ல என்ற போதிலும், 2025 ஜூன் 15 முதல் 17 வரை கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கனனாஸ்கிஸில் நடைபெறும், வருடாந்த கூட்டத்திற்கு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கனடாவின் அழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ள, இந்திய பிரதமர்மோடி, இந்தியாவும் கனடாவும் புதுப்பிக்கப்பட்ட உறவுடன், பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களால் வழிநடத்தப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சீக்கிய பிரிவினைவாதத் தலைவரின் கொலையில் இந்தியா தொடர்புப்பட்டுள்ளதாக, கனடா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இருதரப்பு உறவுகள் மோசமடைந்தன.

எனினும் இந்த குற்றச்சாட்டை புதுடில்லி மறுத்ததுடன், கனேடிய இராஜதந்திரிகளையும் வெளியேற்றியது. பதிலுக்கு கனடாவும் இந்திய ராஜதந்திரிகளை வெளியேற்றியது.

இந்தியாவை பொறுத்தவரை, அது, கனடாவின் 10வது பெரிய வர்த்தக பங்காளியாகும் இதன்படி, இந்தியாவுக்கு பருப்பு வகை உள்ளிட்டு பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாக கனடா விளங்குகிறது.

Share
தொடர்புடையது
25 6849c5dfe0a82
உலகம்செய்திகள்

சீனாவுடன் அதிரடியாக ஒப்பந்தம் செய்த ட்ரம்ப்..! நடக்கவுள்ள மாற்றங்கள்

லண்டனில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...

25 684a2d1c7f215
இலங்கைசெய்திகள்

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதல்...

25 684a1d46ac31b
இந்தியாசெய்திகள்

இந்தியா – இலங்கை ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள சந்தேகம்

இந்தியாவின் இணக்கப்பாடு இன்றி இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அம்பலப்படுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக...

25 684a2b04cca7e
இலங்கைசெய்திகள்

வெலிகம சம்பவத்தின் போது தவறாக வழிநடத்தப்பட்ட அதிகாரிகள்

2023ஆம் ஆண்டு வெலிகம சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற தன்னையும் ஏனையவர்களையும் மூத்த பொலிஸ் அதிகாரிகள்...