25 68444cc754912
இந்தியாஉலகம்செய்திகள்

கனடாவுக்கு வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்துள்ள மார்க் கார்னி

Share

கனடாவில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் பங்கேற்குமாறு, இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய பிரதமர் மார்க் கார்னி இந்த அழைப்பை, தொலைபேசி வாயிலாக விடுத்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், இரண்டு நாடுகளுக்கும் இடையில் மோசமான ராஜதந்திர முறுகல் ஏற்பட்டிருந்த நிலையிலேயே இந்த அழைப்பு செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியா ஜி7 நாடுகளின் உறுப்பினர் அல்ல என்ற போதிலும், 2025 ஜூன் 15 முதல் 17 வரை கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கனனாஸ்கிஸில் நடைபெறும், வருடாந்த கூட்டத்திற்கு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கனடாவின் அழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ள, இந்திய பிரதமர்மோடி, இந்தியாவும் கனடாவும் புதுப்பிக்கப்பட்ட உறவுடன், பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களால் வழிநடத்தப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சீக்கிய பிரிவினைவாதத் தலைவரின் கொலையில் இந்தியா தொடர்புப்பட்டுள்ளதாக, கனடா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இருதரப்பு உறவுகள் மோசமடைந்தன.

எனினும் இந்த குற்றச்சாட்டை புதுடில்லி மறுத்ததுடன், கனேடிய இராஜதந்திரிகளையும் வெளியேற்றியது. பதிலுக்கு கனடாவும் இந்திய ராஜதந்திரிகளை வெளியேற்றியது.

இந்தியாவை பொறுத்தவரை, அது, கனடாவின் 10வது பெரிய வர்த்தக பங்காளியாகும் இதன்படி, இந்தியாவுக்கு பருப்பு வகை உள்ளிட்டு பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாக கனடா விளங்குகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...