யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு 44 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, தமிழ்த் தேசிய பேரவையினரால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
நேற்று (01.06.2025) பிற்பகல் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது, பொது நூலகத்தின் முன்பாக இடம்பெற்ற குறித்த நினைவேந்தலில், பொதுச் சுடரினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஏற்றி வைத்தார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய பேரவை உறுப்பினர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.