15 30
இலங்கைசெய்திகள்

துசித ஹல்லோலுவை மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் மூவர் கைது

Share

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் துசித ஹல்லோலுவையின் ஜீப் வண்டி மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாரஹேன்பிட்டி சுற்றுவட்ட வீதியில் கடந்த 17ஆம் திகதி தனியார் வைத்தியசாலைக்கு அருகில் துசித ஹல்லோலுவை பயணித்த ஜீப் வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பிரகாரம் தற்போதைக்கு மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மற்றும் சம்பவத்திற்கு உதவிய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் வத்தளை மற்றும் கிருலப்பனை பகுதிகளில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் வைத்திருந்த 04 கையடக்க தொலைபேசிகள் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31, 32 மற்றும் 40 வயதான வத்தளை மற்றும் கொழும்பு 14 பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

நாரஹேன்பிட்டி பொலிஸார் மற்றும் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 222
செய்திகள்இலங்கை

தடையின்றி எரிவாயு விநியோகம்: லிட்ரோ கேஸ் நிறுவனம் உறுதி!

எதிர்வரும் மே மாதம் முழுவதும் உள்நாட்டு எரிவாயு விநியோகம் எவ்விதத் தடையுமின்றித் தொடரும் என லிட்ரோ...

world 220
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை காணி அளவீட்டுப் பணி இடைநிறுத்தம்: விகாராதிபதியின் முறைப்பாடும் காணி உரிமையாளர்களின் குற்றச்சாட்டும்!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஏப்ரல் 17,...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 218
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வாயைக் கட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...