10 32
உலகம்செய்திகள்

ரஷ்யாவின் மிருகத்தனத்தை அழுத்தமில்லாமல் நிறுத்த முடியாது! உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த ஜெலென்ஸ்கி

Share

சர்வதேச தலைவர்கள் ரஷ்யா மீது தங்கள் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா நடத்திய இரண்டாவது பாரிய வான்வழித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

சமீபத்திய ரஷ்ய தாக்குதல்களில் சைட்டோமிரின் வடமேற்குப் பகுதியில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் 8,12 மற்றும் 17 வயதுடைய மூன்று குழந்தைகள் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) தனது கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் ஞாயிற்றுக்கிழமை, சர்வதேசத் தலைவர்கள் ரஷ்யா மீது தங்கள் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெலென்ஸ்கி கூறுகையில், “ரஷ்யத் தலைமையின் மீது உண்மையிலேயே வலுவான அழுத்தம் இல்லாமல், இந்த மிருகத்தனத்தை நிறுத்த முடியாது. தடைகள் நிச்சயமாக உதவும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அமைதியை நாடுபவர்கள் அனைவரும் மாஸ்கோவின் போரை நிறுத்த தங்கள் உறுதியை காட்ட வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையில், மாஸ்கோவை நோக்கி பறந்து கொண்டிருந்த ஒரு டசன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
17484473210
சினிமாசெய்திகள்

ஆபத்தில் “thugh life”..கமல்காசன் பேச்சால் சர்ச்சை..! எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட மக்கள்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ,சிம்பு ,திரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் “thugh life” திரைப்படம்...

1 30
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவின் திடீர் பதிவால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவு குறித்து மக்கள் மத்தியில் அதிகம்...

20 26
இலங்கைசெய்திகள்

வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியை கையகப்படுத்தும் அரசின் திட்டம் தோல்வி

வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட காணி உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்பை அடுத்து,...

images 1 1
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வீட்டுவசதி உதவி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும்...