11 28
இலங்கைசெய்திகள்

கட்சியின் நடவடிக்கை குறித்து அதிருப்தி வெளியிடும் எஸ்.எம்.மரிக்கார்

Share

ஐக்கிய மக்கள் சக்தியின் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது தம்மிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படவில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.

அனைத்துப் பொறுப்புக்களும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மானிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணசபை, மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் கொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கணிசமான வாக்கு பின்னணியைக் கொண்ட தமக்கு உரிய முன்னுரிமை அளிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபையின் மேயர் யார் என்பது பற்றியோ அடுத்த கட்ட நகர்வு பற்றியோ தமக்கு எதுவும் தெரியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமக்கு வழங்கப்படாத பொறுப்புக்களை பலவந்தமாக பெற்றுக்கொள்ளும் திட்டமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் தாம் இந்தக் கட்சியை விட்டு வெளியேறிச் செல்ல போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MV5BNDQ4ZGM3YjktYjA4OS00ZTA4LTg1ODMtMjBkMWYwMWE5YTEyXkEyXkFqcGc@. V1
சினிமாசெய்திகள்

அவரது ரோல் தான் படத்திற்கு இதை செய்தது.. நடிகர் சசிகுமார் உடைத்த விஷயம்

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர், இயக்குநர் என மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்...

24 669748c4e1b78
சினிமாசெய்திகள்

துபாய்ல Part Time Job செய்தேன்.. வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்தது...

25 6838aa5173a01
இலங்கைசெய்திகள்

இன்னும் ஆயிரமாயிரம் நினைவுச் சின்னங்கள் எழும்! இயக்குனர் கௌதமன் கண்டனம்

ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்தும் வகையில், கனடாவின் பிரம்டன் நகரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி...

l21720230608120836
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் படம் குறித்து விஜய் எடுத்த அதிர்ச்சி முடிவு.. கடும் வருத்தத்தில் ரசிகர்கள்

நடிகர் விஜய் தற்போது அரசியலில் முழுமையாக இறங்கியுள்ள காரணத்தினால், சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். ஜனநாயகன்...