2 38
இலங்கைசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்வது குறித்து இந்திய அதிகாரிகள் ஆய்வு!

Share

இந்திய சுரங்க மற்றும் கனிமத்துறை அமைச்சகத்தின் குழு ஒன்று, இலங்கையில் கனிமத் தளங்களுக்கு அண்மையில் விஜயம் செய்துள்ளது.

அத்துடன், இலங்கையின் முக்கிய கனிமத் தளங்களுக்குச் சென்று உயர் அதிகாரிகளையும் சந்தித்துள்ளது.

கனிமத் துறையில் சாத்தியமான ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இந்தக் குழு, தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியையும் சந்தித்துள்ளது.

இந்தப் பயணத்தின் நோக்கம், முதலீடு மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்வதும், மேம்பட்ட சுரங்க தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதுமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ சதீஸ் சந்திர துபே, இந்தக்குழுவுக்கு தலைமையேற்றிருந்தார்.

இலங்கை அரசின் முதலீட்டு சபையின் தரவுகளின்படி, இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிழக்கு கடற்கரை நகரமான புல்மோட்டை மற்றும் வடமேற்கு கடற்கரை நகரமான புத்தளம் ஆகிய இரண்டிலும் 7.5 மில்லியன் மெட்ரிக் தொன், இல்மனைட்ஃரூட்டைல்ஃசிர்கான் வைப்புத்தொகைகள், 45,000 மெற்றிக்தொன் கிராஃபைட் மற்றும் 60 மில்லியன் மெற்றிக்தொன் அபாடைட் ஆகியவை உள்ளன.

அத்துடன், இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு கனிம மணல் படிவில் இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனாசைட், கார்னெட், சில்லிமனைட் மற்றும் பிற கனரக கனிமங்கள் இருப்பதாக ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் தரவு காட்டுகிறது.

முன்னதாக, கடந்த சுரங்கத்துறையில் முதலீடு செய்யவென சுமார் 10 வெளிநாட்டு நிறுவனங்களை வரவழைத்தது. எனினும் செயல்முறையை இறுதிப்படுத்த முடியவில்லை.

இலங்கையை பொறுத்தவரையில், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு கனிமங்களை ஏற்றுமதி செய்கிறது.

இதன்மூலம், 2024 இல் சுமார் 25 மில்லியன் டொலர் சம்பாத்தியம் கிடைத்தது. எனினும், இது, 2022 இல் ஏற்றுமதி செய்யப்பட்டதில் பாதிக்கும் குறைவானது என்று மத்திய வங்கி தரவு காட்டுகிறது.

Share
தொடர்புடையது
17484473210
சினிமாசெய்திகள்

ஆபத்தில் “thugh life”..கமல்காசன் பேச்சால் சர்ச்சை..! எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட மக்கள்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ,சிம்பு ,திரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் “thugh life” திரைப்படம்...

1 30
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவின் திடீர் பதிவால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவு குறித்து மக்கள் மத்தியில் அதிகம்...

20 26
இலங்கைசெய்திகள்

வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியை கையகப்படுத்தும் அரசின் திட்டம் தோல்வி

வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட காணி உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்பை அடுத்து,...

images 1 1
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வீட்டுவசதி உதவி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும்...