2 38
இலங்கைசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்வது குறித்து இந்திய அதிகாரிகள் ஆய்வு!

Share

இந்திய சுரங்க மற்றும் கனிமத்துறை அமைச்சகத்தின் குழு ஒன்று, இலங்கையில் கனிமத் தளங்களுக்கு அண்மையில் விஜயம் செய்துள்ளது.

அத்துடன், இலங்கையின் முக்கிய கனிமத் தளங்களுக்குச் சென்று உயர் அதிகாரிகளையும் சந்தித்துள்ளது.

கனிமத் துறையில் சாத்தியமான ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இந்தக் குழு, தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியையும் சந்தித்துள்ளது.

இந்தப் பயணத்தின் நோக்கம், முதலீடு மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்வதும், மேம்பட்ட சுரங்க தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதுமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ சதீஸ் சந்திர துபே, இந்தக்குழுவுக்கு தலைமையேற்றிருந்தார்.

இலங்கை அரசின் முதலீட்டு சபையின் தரவுகளின்படி, இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிழக்கு கடற்கரை நகரமான புல்மோட்டை மற்றும் வடமேற்கு கடற்கரை நகரமான புத்தளம் ஆகிய இரண்டிலும் 7.5 மில்லியன் மெட்ரிக் தொன், இல்மனைட்ஃரூட்டைல்ஃசிர்கான் வைப்புத்தொகைகள், 45,000 மெற்றிக்தொன் கிராஃபைட் மற்றும் 60 மில்லியன் மெற்றிக்தொன் அபாடைட் ஆகியவை உள்ளன.

அத்துடன், இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு கனிம மணல் படிவில் இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனாசைட், கார்னெட், சில்லிமனைட் மற்றும் பிற கனரக கனிமங்கள் இருப்பதாக ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் தரவு காட்டுகிறது.

முன்னதாக, கடந்த சுரங்கத்துறையில் முதலீடு செய்யவென சுமார் 10 வெளிநாட்டு நிறுவனங்களை வரவழைத்தது. எனினும் செயல்முறையை இறுதிப்படுத்த முடியவில்லை.

இலங்கையை பொறுத்தவரையில், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு கனிமங்களை ஏற்றுமதி செய்கிறது.

இதன்மூலம், 2024 இல் சுமார் 25 மில்லியன் டொலர் சம்பாத்தியம் கிடைத்தது. எனினும், இது, 2022 இல் ஏற்றுமதி செய்யப்பட்டதில் பாதிக்கும் குறைவானது என்று மத்திய வங்கி தரவு காட்டுகிறது.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...