5 28
இலங்கைசெய்திகள்

ராஜித , கெஹெலிய, தயாசிறிக்கு எதிராக விசாரணை! தமிழ் எம்.பி ஒருவரும் பட்டியலில்

Share

ஜனாதிபதி நிதியத்தை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களின் வங்கிக் கணக்குகளை சோதனையிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட 12 பேருடைய வங்கிக் கணக்குகளை சோதனையிடுவதற்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திடமிருந்து நிதி பெற்றுக் கொண்டவர்களின் விபரங்கள் அண்மையில் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.

இதற்கமைய குருநாகல் மாவட்ட உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, சுசில் பிரேமஜயந்த, பியல் நிஷாந்த, ஆகியோர் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றுக்கொண்டுள்ளதாக நளிந்த கூறியுள்ளார்.

மேலும், ஜகத் குமார 10 இலட்சம் ரூபா, குமாரசிறி 9 இலட்சம், ஜயலத் ஜயவர்தன 10 இலட்சம், நாமல் குணரத்ன 10 இலட்சம், தர்மசிறி பண்டா 10 இலட்சம், விதுர விக்கிரமநாயக்க 15 இலட்சம், விமலதீர திசாநாயக்க 30 இலட்சம், லகி ஜயவீர 16 இலட்சம், இராமலிங்கம் சந்திரசேகரன் 14 இலட்சம், ஜோன் அமரதுங்க 40 இலட்சம் என்ற அடிப்படையில் நிதி பெற்றுள்ளதாக அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன 100 இலட்சம் ரூபா, கெஹெலிய ரம்புக்வெல்ல 110 இலட்சம் ரூபா, டி. மு ஜயரத்ன 300 இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றுள்ளனர்.

மேலும் மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபகச, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்த காலப்பகுதிகளிலே இந்த ஜனாதிபதி நிதியத்தின் நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி நிதியத்தை முறைகேடாகப் பயன்படுத்தியவர்கள் தொடர்பில் விசாரணையை முன்னெடுக்குமாறு கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

மக்கள் நிதியைப் பாதுகாப்பதற்கான சட்டத்தரணிகள் அமைப்பினால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கமைய ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கு அமைய குறித்த விசாரணையை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இதற்கமை இந்த விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் விடயங்களை முன்வைத்தனர்.

இதன்போது ஜனாதிபதி நிதியத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, தயாசிறி ஜயசேகர மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருடைய வங்கிக் கணக்குகளை சோதனையிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர அனுமதி வழங்கினார்.

Share
தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...