17 20
இலங்கைசெய்திகள்

298 ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்களை கைது செய்த நாடு!

Share

ஐஎஸ்ஐஎஸ் என்ற இஸ்லாமிய அரசுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 298 பேரை துருக்கிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் இதனை நேற்று அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக, அங்காரா, இஸ்தான்புல் மற்றும் இஸ்மிர் உட்பட 47 மாகாணங்களில் இடம்பெற்ற நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேககத்துக்குரியவர்கள், ஐஎஸ்ஐஎஸ்_க்கு நிதியளித்தல் மற்றும் அதன் சார்பாக பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளல் உட்பட்ட தீவிரமான பணிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கைகளின் போது, பல உரிமம் பெறாத கைத்துப்பாக்கிகள் உட்பட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2013 ஆம் ஆண்டில் துருக்கியின் அரசு, அதிகாரப்பூர்வமாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை, ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.

Share
தொடர்புடையது
Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...

Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...