8 27
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட முடியாமல் திணறும் அநுர அரசு

Share

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் சக்திக்கு மேலும் 9 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. எனினும் பெரும்பான்மை அதிகாரத்தைப் பெறுவது தொடர்பான நெருக்கடி நிலைமை இன்னும் நிலவுகிறது.

அரசாங்கம் பெரும்பான்மை அதிகாரத்தை இழந்துள்ள நிலையில் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று முன்தினம் பெலவத்தையில் உள்ள கட்சி தலைமையகத்தில் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் போட்டியிட்டு ஆசனங்களை வென்ற ஜனநாயக தேசியக் கூட்டணி மற்றும் சில கட்சிகளின் பிரதிநிதிகளும், மூன்று சுயேட்சை குழுக்களின் பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

மேலும் அவர்கள் தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்க இணங்கியுள்ளனர். இந்த ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கொழும்பு மாநகர சபையில் ஜனநாயக தேசியக் கூட்டணி ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியது.

அதே நேரத்தில் ஐக்கிய சமாதான கட்சி 2 ஆசனங்களைக் கைப்பற்றியது. மேலும், கலந்துரையாடலில் பங்கேற்ற சுயேட்சைக் குழு எண் இரண்டில் ஒரு உறுப்பினர் பதவியும், சுயேட்சைக் குழு எண் மூன்றில் 3 உறுப்பினர் பதவிகளும், சுயேட்சைக் குழு எண் நான்கில் 2 உறுப்பினர் பதவிகளும் இருந்தன.

அதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 9 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும். இம்முறை கொழும்பு மாநகர சபையின் அமைப்பிற்கமைய, தேசிய மக்கள் சக்திக்கு 48 உறுப்பினர்கள் கிடைத்துள்ளன.

மேலும் அந்த 9 உறுப்பினர் பதவிகளையும் ஒன்றாகச் சேர்த்தால், அவர்களுக்கு வழங்கப்படும் மொத்த உறுப்பினர் பதவிகளின் எண்ணிக்கை 57 ஆகும்.

எனினும் அந்த 9 இடங்களை விட்டுக்கொடுத்தாலும், எதிர்க்கட்சிக்கு இன்னும் 60 இடங்கள் இருக்கும். அதற்கமைய, எதிர்க்கட்சி இன்னும் பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜனநாயக தேசிய கூட்டணி எந்த கட்சியை ஆதரிக்கும் என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியிடப்படும் என ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் நிலுக்ஷ குமார நேற்று பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 68308d9c71c6a
இலங்கைசெய்திகள்

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின்...

25 68308f63a7a09
இலங்கைசெய்திகள்

ஏழு வயது சிறுமியை தவறான செயலுக்கு உட்படுத்திய முதியவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

ஏழு வயது சிறுமியை சட்ட ரீதியான பாதுகாவலரிடம் இருந்து கடத்தி, பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்...

25 683094aa5d831
உலகம்செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக 50 சதவீத வரி விதித்த ட்ரம்ப்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 சதவீத வரி...

25 68309c4654a51
உலகம்செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா பேரின் மிகமுக்கிய ஒப்பந்தம் நடைமுறைக்கு

உக்ரைன் மற்றும் ரஷ்யா இரு தரப்பிலும் கைது செய்யப்பட்ட தலா ஆயிரம் பேரை விடுதலை செய்வதற்கான...