14 24
இலங்கைசெய்திகள்

நல்லூரில் திறக்கப்பட்ட அசைவ உணவகம்! வேலன் சுவாமிகள் விடுத்துள்ள கோரிக்கை

Share

அண்மையில் நல்லூர் முன் வீதியில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்தை அகற்றுவது தொடர்பில் தமிழ்ச் சைவ பேரவையின் அழைப்பின் பெயரில் சைவ அமைப்புக்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று மாலை 6.30 மணியளவில் நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை(23.05.2025) சைவ அமைப்புக்கள் மற்றும் ஆதீனங்கள், குருமார் ஒன்றியங்கள், ஆலய பரிபாலன சபையினர் தலைமையில் வடமாகாண ஆளுநரை சந்தித்து குறித்த அசைவக் கடையினை அகற்றுவது தொடர்பில் மனு ஒன்றை கையளிப்பது என இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ள விரும்பும் அமைப்புக்கள் அல்லது ஆதரவு தெரிவிக்க விரும்பும் அமைப்புக்கள் வியாழக்கிழமை நள்ளிரவிற்கு முன்னர் 0770756333 எனும் இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 207
செய்திகள்இலங்கை

புத்தாண்டு விடுமுறை சோகம்: 4 நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடும் வகையில் நீர்நிலைகளுக்குச் சென்றவர்களில், கடந்த ஏப்ரல் 12...

world 206
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மல்லாவியில் இரு யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகம்: மத போதகர் உள்ளிட்ட மூவர் அதிரடி கைது!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி – வவுனிக்குளம் பகுதியில் இரு யுவதிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில்...

world 205
செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 தேர்தல் அறிக்கை: மகளிருக்குத் தங்கம் மற்றும் இலவச மின்சார வாக்குறுதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான...

world 204
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் 21 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை: பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

இலங்கையின் 21 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு (Heat...