17 19
இலங்கைசெய்திகள்

முகநூல் அழுத்தத்தினாலே போர்வீரர் நினைவு நிகழ்வில் பங்கேற்றார் அநுர : வெளியான தகவல்

Share

முகநூல் ஊடாக பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க போர்வீரர் நினைவு நிகழ்வில் பங்கேற்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக செயற்பாட்டாளரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் கிடைக்கப் பெற்ற அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் காரணமாக போர்வீரர் நினைவு நிகழ்வில் பங்கேற்பதனை தவிர்ப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிகழ்வுகளில் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரே பங்கேற்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஜனாதிபதி இந்த நிகழ்வில் பங்கேற்காதிருப்பதனை எதிர்த்து பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி இந்த நிகழ்வில் பங்கேற்ற நேரிட்டது என பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தெவ்சிறி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில்...