6 27
இலங்கைசெய்திகள்

அநுரவின் உறுதிமொழியால் லக்மாலிக்கு ஏற்பட்ட சிக்கல்

Share

தேசிய மக்கள் சக்தியையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தென்னிலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட வாகன ஏலம் தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட  உரையாடலின் போதே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொலவத்த, தற்போதைய ஜனாதிபதி முன்வைத்த சில கருத்துக்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் ஒரு மில்லியன் டொலர்களுக்கு மேல் மதிப்புள்ள வாகனங்களை பயன்படுத்துவதாகவும், தான் ஜனாதிபதியானவுடன் அவற்றை ஏலம் விடுவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  கூறியதாக இதன்போது பிரேம்நாத் சி தொலவத்த சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், இதை சவால் செய்த லக்மாலி ஹேமச்சந்திரா, ஜனாதிபதி அவ்வாறு கூறவில்லை என்றும், அவ்வாறு கூறியிருந்தால், அதை பிரேம்நாத் சி தொலவத்த நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொலவத்த, ஜனாதிபதியின் அறிக்கையை தனது கையடக்க தொலைபேசியில் பிரதியெடுத்து நிகழ்ச்சிக்கு முன்னால் பகிரங்கப்படுத்தியிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் லக்மாலி ஹேமச்சந்திரா, தனது சொந்த தகவலுக்காக இது குறித்து விசாரித்ததாகவும், ஜனாதிபதி அப்படிச் சொன்னால் அது சரி என்றும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...