3 26
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி போர்வீரர்களை இழிவுபடுத்துகின்றார்

Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க போர்வீரர்களை இழிவுபடுத்துவதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

30 ஆண்டு கால போரையும் இயற்கை அனர்த்தத்தையும் ஒப்பீடு செய்ததன் மூலம் ஜனாதிபதியின் போர் பற்றிய புரிதல் தெளிவாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மழையினால் ஏற்படக்கூடிய மண்சரிவிற்கு 30 ஆண்டுகளாக நீடித்த போர் வெற்றியை ஒப்பீடு செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி போர்வீரர்களை படைச் சிப்பாய்கள் சித்தரிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஒருநாள் மட்டும் போர் வீரர்கள் போற்றப்படக் கூடாது எனவும் எந்தநாளும் அவர்கள் போற்றப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

உலகின் மோசமான பயங்கரவாத இயக்கமொன்றை வெற்றிகொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான போர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டதல்ல எனவும் தற்போதைய ஜனாதிபதி பிழையான தகவலை கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

படலந்த அறிக்கையை பார்வையிட்டால் ஜே.வி.பி.யினர் எவ்வாறு படைவீரர்களை மதித்தார்கள் என்பது அம்பலமாகும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....