10 26
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருத்தப்படவுள்ள முக்கிய அரச கட்டடங்கள்

Share

இலங்கையின் மிகவும் முக்கியமான மூன்று அரச கட்டடங்களுக்கு, திருத்தப்பணிகள் அவசியம் என கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையில் உள்ள நாடாளுமன்ற வளாகம், காலி முகத்திடலில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடம் அதாவது தற்போது ஜனாதிபதி செயலகம் மற்றும் கொழும்பு 7 இல் உள்ள சுதந்திர சதுக்கம் என்பனவே அவையாகும்.

இந்த கட்டடங்களுக்கு, பராமரிப்பு மற்றும் கட்டமைப்பு மேம்பாடுகள் தேவைப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான அதிகாரிகள், ஏற்கனவே மதிப்பீடு மற்றும் வடிவமைப்பு அறிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சமர்ப்பித்துள்ளனர், இதன்படி, நாடாளுமன்ற வளாகத்தை மட்டும் புதுப்பிப்பதற்கு சுமார் 10 பில்லியன் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளது.

கூரையில் நீர் கசிவு காரணமாக நாடாளுமன்ற கட்டிட சுவர்கள் மற்றும் தூண்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்குள், கட்டம் கட்டமாக, மேற்கொள்ளும் வகையில், புதுப்பிக்கும் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...