5 25
இலங்கைசெய்திகள்

சிறீதரனை சபையில் உரையாற்றவிடாமல் குழப்பம்! அர்ச்சுனாவும் குறுக்கீடு..

Share

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக சபைக்குள் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.

சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்டோர் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு உரையாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோதும், அவரை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சியினர் கடும் கூச்சலிட்டுள்ளனர்.

இதற்கிடையில், சிறீதரன் எம்.பி உரையாற்ற முயற்சிக்கின்ற போதிலும் அதற்கு இடம்கொடாமல் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் கூச்சலிட்டுள்ளனர்.

இதேவேளை, இடையில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, “தான் ஒரு 20 செக்கன்கள் இடையில் உரையாற்றியபோது தன்னை நாடாளுமன்றத்திற்கு வெளியில் அனுப்பியதாகவும், ஆனால், தற்போது இவ்வளவு பேர் கூச்சலிட்டுக் கொண்டிக்கும் போது அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும்” ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...