17 18
இலங்கைசெய்திகள்

முப்படைகளை சேர்ந்த 12 ஆயிரம் பேருக்கு பதவியுயர்வுகள்..!

Share

இலங்கையின் முப்படைகளிலும் பணியாற்றும், 12,434 பேருக்கு பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஆயுதப் படைகளின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்துக்கு, ஒரு சக்திவாய்ந்த கௌரவத்தை வழங்கும் வகையில், இந்த பதவியுயர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

16ஆவது தேசிய போர்வீரர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஒப்புதலுடன், இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி இலங்கை இராணுவத்தின் 186 அதிகாரிகள் மற்றும் 10,093 ஏனைய வீரர்கள், இலங்கை கடற்படையின் 22 அதிகாரிகள் மற்றும் 1256 வீரர்களுக்கு பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன

அதேநேரம் விமானப்படையில் 9 அதிகாரிகளுக்கும் 868 வீரர்களுக்கும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...