17 18
இலங்கைசெய்திகள்

முப்படைகளை சேர்ந்த 12 ஆயிரம் பேருக்கு பதவியுயர்வுகள்..!

Share

இலங்கையின் முப்படைகளிலும் பணியாற்றும், 12,434 பேருக்கு பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஆயுதப் படைகளின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்துக்கு, ஒரு சக்திவாய்ந்த கௌரவத்தை வழங்கும் வகையில், இந்த பதவியுயர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

16ஆவது தேசிய போர்வீரர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஒப்புதலுடன், இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி இலங்கை இராணுவத்தின் 186 அதிகாரிகள் மற்றும் 10,093 ஏனைய வீரர்கள், இலங்கை கடற்படையின் 22 அதிகாரிகள் மற்றும் 1256 வீரர்களுக்கு பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன

அதேநேரம் விமானப்படையில் 9 அதிகாரிகளுக்கும் 868 வீரர்களுக்கும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...