17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

Share

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் (Vijay) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை (18) தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் தாயகங்கள் உட்பட, சர்வதேச அளவிலும் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ள விஜய், “உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம்.

மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்.

மாமக்கள் போற்றுதும், மாவீரம் போற்றுதும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...

images 6
இலங்கைசெய்திகள்

ஷெங்கன் விசா: ஜேர்மன் தூதரகம் புதிய அறிவிப்பு – நியமனங்களை VFS குளோபல் மூலம் நிகழ்நிலையில் பதிவு செய்ய உத்தரவு!

இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகம், ஷெங்கன் விசா விண்ணப்பங்களுக்கான அனைத்து நியமனங்களையும் (Appointments) நேற்று (நவ 4)...

24 66af4e7e9035f
செய்திகள்இலங்கை

அவுஸ்திரேலியாவில் புரட்சிகரமான ‘சோலார் ஷேரர்’ திட்டம்: வீடுகளுக்கு தினமும் 3 மணி நேரம் வரை இலவச மின்சாரம்!

அவுஸ்திரேலிய அரசாங்கம், வீடுகளுக்குத் தினமும் 3 மணி நேரம் வரை இலவச மின்சாரம் வழங்கும் ‘சோலார்...

34d96040 2a8a 11f0 b26b ab62c890638b.png
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் காற்றாலைத் திட்டங்கள்: மக்களின் விருப்பமின்றி மேலும் திட்டங்கள் இல்லை – அமைச்சரவை அங்கீகாரம்!

மன்னார் தீவு மக்களின் விருப்பம் இல்லாமல், தொடர்ந்து அங்கு புதிய காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்களை முன்னெடுக்காமல்...