14 21
உலகம்செய்திகள்

இஸ்ரேலின் தாக்குதல்: காசாவில் ஒரு வாரத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி

Share

இஸ்ரேலிய தாக்குதல்களில் சனிக்கிழமை இரவு முழுவதும் காசாவில் குறைந்தது 130 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கலாமென சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் அதிகரித்த குண்டுவீச்சின் விளைவாக நேற்று வரையிலான ஒரு வாரத்தில் குறைந்தது 464 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஹமாஸ் உடனான பேச்சுவார்த்தைகளில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டம் இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

ஆனால் இரு தரப்புக்களினதும் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் அண்மையில் டோஹாவில் இடம்பெற்ற மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தம் குறித்த விவாதங்களும், ஹமாஸ் போராளிகளை நாடு கடத்துவதற்கும், படைகளை இராணுவமயமாக்குவதற்கும் ஈடாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டமும் அடங்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த விடயங்களை ஹமாஸ் நிராகரித்துள்ளது.

இஸ்ரேலின் நிலைப்பாடு மாறாமல் உள்ளது, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உறுதிமொழி இல்லாமல் பணயக்கைதிகளை விடுவிக்க அவர்கள் விரும்புகிறார்கள் என்று ஹமாஸ் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவருதல், இஸ்ரேலிய துருப்புக்களை வெளியேற்றுதல், காசாவுக்கான உதவி மீதான முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவித்தல் ஆகியவற்றிற்கு ஈடாக ஹமாஸ் அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்க முன்மொழிகிறது என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இஸ்ரேலின் அதிகரித்த குண்டுவீச்சின் விளைவாக நேற்று வரையிலான ஒரு வாரத்தில் குறைந்தது 464 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏனினும் இந்த உயிரிழப்புகள் குறித்து இஸ்ரேலிய இராணுவம் உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...