11 21
இலங்கைசெய்திகள்

ஜோர்தானிய எல்லையூடாக இஸ்ரேலுக்குள் நுழைந்த இலங்கையர்கள் கைது!

Share

ஜோர்தானிய எல்லையைக் கடந்து இஸ்ரேலுக்குள் நுழைந்த இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜோர்டான் பள்ளத்தாக்கு சமூகத்தில் வசிக்கும் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த குறித்த இரண்டு சட்டவிரோத வெளிநாட்டினர், உள்ளூர்வாசியிடம தண்ணீர் கேட்டதுடன், தமது தொலைபேசிகளுக்கு மின்னேற்றம் செய்து தரவேண்டும் என்று கோரியுள்ளனர்.

இந்தநிலையிலேயே அவர் சந்தேகப்பட்டு, இஸ்ரேலிய படையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து இருவரும் இஸ்ரேலிய படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இரண்டு ஊடுருவல்காரர்களும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்பதை இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...