2 32
இலங்கைசெய்திகள்

இந்திய – இலங்கை கப்பல் மூலம் போதைப்பொருள் கடத்தல்

Share

நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் தற்போது நடைமுறையில் உள்ள கடுமையான பாதுகாப்பு வசதிகள் காரணமாக, கடத்தல்காரர்கள் இந்திய-இலங்கை கப்பல் சேவை மூலம் போதைப்பொருள் கடத்தலை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் ஒரு சம்பவமாக, அதிகாரிகள் 41.2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒரு பெரிய குஷ் கடத்தலை நேற்று முறியடித்துள்ளனர்.

தென்னிந்திய பயணி ஒருவர் தாம் கொண்டு வந்த பொருட்களுடன் மறைத்து வைத்திருந்த நான்கு கிலோவுக்கும் அதிகமான கஞ்சா வகை ‘குஷ்’ போதைப்பொருளை, இலங்கை சுங்க அதிகாரிகள் மீட்ட சம்பவம், காங்கேசன்துறை துறைமுகத்தில் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து ‘சிவகங்கை’ படகில் ஏறிய 33 வயதுடைய இந்த நபர் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...