13 19
இலங்கைசெய்திகள்

இலங்கை வழியாக வாகன இறக்குமதி மோசடி: கைது செய்யப்பட்ட இந்திய வர்த்தகர்

Share

இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த சொகுசு சிற்றாந்து வர்த்தகர், ஒருவர் குஜராத்தில் சுங்க வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், உயர் ரக வாகனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததில் ஈடுபட்டிருந்த நிலையில், இலங்கையின் மதிப்பில் மொத்தம் 300 கோடி ரூபாய் சுங்க வரியை ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பசாரத் கான் என்ற இந்த வர்த்தகர், பிற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு சிற்றூந்துகளை, போலியான விலைப்பட்டியல்கள் மற்றும் ஆவணங்களைப் பயன்படுத்தி குறைத்து மதிப்பிட்டு வந்தார் என்பது தெரியவந்துள்ளது.

ஆரம்ப விசாரணைகளின்படி, உயர் ரக சிற்றூந்துகள், அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அவை துபாய் அல்லது இலங்கை வழியாக எடுத்து வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், சிற்றூந்துகள் இந்திய வீதி தரநிலைகளுக்கு இணங்க இடது கை ஓட்டத்தில் இருந்து வலது கை ஓட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.

பின்னர், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி குறித்த வாகனங்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த வகையில் கான், குறைந்தது 30 உயர் ரக வாகனங்களை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்படி, ரோல்ஸ் ரோய்ஸ், காடிலாக் எஸ்கலேட், ஹம்மர் இவி, லிங்கன் நேவிகேட்டர், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் மற்றும் லெக்ஸஸ் உள்ளிட்ட நாட்டின் சில அரிய வாகனங்களும் அவரின் இறக்குமதிகளில் அடங்கியுள்ளன.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...