22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Share

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம் 2 ஆம் திகதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளாட்சி ஆணையாளர் வாக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளாட்சி சபை தேர்தல் முடிவுகளுக்கமைய, எந்தக் கட்சியும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாமையினால் இவ்வாறான வாக்கெடுப்பின் தேவை ஏற்பட்டுள்ளது.

அதற்கைமய, உள்ளாட்சி ஆணையரால் நடத்தப்படும் வாக்கெடுப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் ஆளும் தரப்பு அல்லது எதிர்க்கட்சி வேட்பாளர், மேயராக வருவதற்கான வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

உள்ளூராட்சித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியில் கொழும்பு மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 48 ஆகும்.

.ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகளின் சார்பில் 69 உறுப்பினர்கள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...