16 16
இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி

Share

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று அழைக்கப்படும் ஆசிரியையான ஹைசிகா பெர்னாண்டோ இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்யார்.

2025, மே 10 ஆம் திகதியன்று, இளைஞன் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஹைசிகா பெர்னாண்டோவை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

குறித்த ஆசிரியையின் தாக்குலால், பாதிக்கப்பட்ட இளைஞர், சிகிச்சைக்காக நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

சம்பவத்தைத் தொடர்ந்து, ஹைசிகா பெர்னாண்டோ அந்தப் பகுதியை விட்டு தலைமறைவாகி, தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்தார்.

அதே நேரத்தில் அவரது கணவரும் அவரது மேலாளரும் கட்டான பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, ஹைசிகா பெர்னாண்டோவும் ஒரு சட்டத்தரணியின் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

இந்தநிலையில் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த ஹைசிக்காவின் கணவர் மேலாளர் மற்றும் ஹைசிகா ஆகியோருக்கு பிணை அனுமதிக்கப்பட்டது.

இதற்கிடையில், தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இளைஞனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், சந்தேக நபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் மௌனப் போராட்டத்தை நடத்தினர்.

Share
தொடர்புடையது
Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...

01 38
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோர்முஸ் நீரிணை மூடல்: இலங்கையின் உணவுப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் என எச்சரிக்கை!

மத்திய கிழக்கின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) திடீரென...

01 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணம் உயர்ந்தாலும் நீர்க் கட்டணத்தில் மாற்றமில்லை: தேசிய நீர் வழங்கல் சபை தகவல்!

நாட்டில் அண்மையில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதிலும், தற்போதைக்கு நீர்க் கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் ஏதுமில்லை...