23 8
இலங்கைசெய்திகள்

தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ள டீச்சர் அம்மா

Share

இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள, சர்ச்சைக்குரிய ஆசிரியை ஹயேசிகா பெர்னாண்டோ தொடர்ந்தும் தேடப்பட்டு வருகிறார்.

அவரை கைது செய்வதற்காக, மூன்று பொலிஸ்; குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தனியார் கல்வி நிலையத்தில், ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் மாணவர்களிடையே ‘டீச்சர் அம்மா என்று அறியப்பட்ட ஹயேசிகா பெர்னாண்டோ, கடந்த வாரம் நீர்கொழும்பில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

இந்தநிலையி;ல் இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டீச்சர் அம்மா, தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வருகிறார்.

கட்டான பொலிஸார் விசாரணைகளை நடத்தி வரும் நிலையில், குறித்த ஆசிரியை அந்த இளைஞரின் இடுப்பில் உதைத்ததாகவும், பின்னர் அவரது கணவரும் மேலாளரும் அந்த இளைஞரை தாக்கியதாகவும் தெரிய வந்துள்ளது.

தனது ஊழியர்களில் ஒருவரான இளம் பெண் ஒருவருக்கு, கணினி செயல்பாடுகளில் பயிற்சி அளிக்க குறித்த இளைஞர் பணியமர்த்தப்பட்டதாகவும், இந்தநிலையில் குறித்த இளைஞர், இளம் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் காரணமாகவே, சம்பந்தப்பட்ட இளைஞர், சர்ச்சைக்குரிய ஆசிரியை மற்றும்; இருவரால் இளைஞர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பொலிஸாரின் கூற்றுப்படி, ஆசிரியை தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், தமது தொலைபேசியில் இருந்து அனைத்து தகவல்தொடர்புகளையும் துண்டித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...