5 19
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதிக்காக கொழும்பில் தேடப்படும் வீடு

Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தங்குவதற்காக கொழும்பில் வீடொன்று தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வருண ராஜபக்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

வருண ராஜபக்சவின் யூடியூப் பக்கத்தில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுர ஜனாதிபதி பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமைக் காரியாலயத்தில் தங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள சில பிரச்சினைகளினால் பாதுப்பான வீடொன்றை தேடி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அதிகாரபூர்வ ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்துவதில்லை என வாக்குறுதி அளித்திருந்தார்.

இதன் காரணமாக கொழும்பில் வசிப்பதற்காக, சாதாரணமான வீடொன்று ஜனாதிபதி தரப்பில் தேடப்பட்டு வருவதாக வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...