27 4
உலகம்செய்திகள்

ஐபிஎல் போட்டிகள் முழுமையாக நிறுத்தம்..!

Share

இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி, ஜம்மு மற்றும் பதன்கோட்டில் மேற்கொள்ளப்படும் என்று விடுக்கப்பட்ட விமானத் தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது,

இந்தநிலையில்; இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகின்றமையால், ஐபிஎல்லின் முழு போட்டிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

போட்டிகளில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களால் பாதுகாப்பு கவலைகள் எழுப்பப்பட்ட நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இது தொடர்பில் அறிவித்துள்ளது.

முன்னதாக, நேற்று பஞ்சாப் அணி 10.1 ஓவர்களில் 1 விக்கெட்டுக்கு 122 ஓட்டங்களை எடுத்திருந்தபோது, திடீரென்று மின்சார விளக்குகள் அணைந்தன.

இதனையடுத்து, அணிகளின் வீரர்களும் பார்வையாளர்களும் பாதுகாப்பு கருதி மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த மைதானத்தின் கொள்ளளவு 23,000 பேர் என்ற நிலையில், வெளியேற்றப்பட்டபோது சுமார் 80 சதவீத இரசிகர்கள் அங்கு கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...