23 5
உலகம்செய்திகள்

இந்தியாவின் 12 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ள பாகிஸ்தான்

Share

பாகிஸ்தானுக்குள் பல இடங்களை குறிவைத்து, வான்வழித் தாக்குதல்கள் நடத்திய ஒரு நாளுக்குப் பின்னர், இந்தியா அனுப்பிய 12 ஆளில்லாத ட்ரோன்களை தாம் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

தமது வான்வெளியில் அத்துமீறி பிரவேசித்ததாகக் கூறி இந்த ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இது இரு அணு ஆயுத நாடுகளுக்கும் இடையே பரந்த மோதலுக்கான அச்சத்தை ஏற்படுத்தியதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஹரோப் ட்ரோன்கள் என அடையாளம் காணப்பட்ட இந்திய ட்ரோன்கள் பாகிஸ்தானின் இரண்டு பெரிய நகரங்களான கராச்சி மற்றும் லாகூர் அருகே உட்பட பல்வேறு இடங்களில் இடைமறிக்கப்பட்டன.

அத்துடன் ட்ரோன்களின் சிதைவுகள்; தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக, பாகிஸ்தானின் இராணுவ பேச்சாளர்; மேஜர் ஜெனரல் அகமது செரீப் சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்திய ட்ரோன்கள் பாகிஸ்தான் வான்வெளியில் தொடர்ந்து அனுப்பப்படுகின்றன.

இந்த ஆக்கிரமிப்புக்காக இந்தியா தொடர்ந்து விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் சவுத்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய ட்ரோன் தாக்குதல்;கள் காரணமாக, ஒரு பொதுமகன் கொல்லப்பட்டதாகவும், நான்கு படை வீரர்கள் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

ட்ரோன்களில் ஒன்று லாகூர் அருகே உள்ள இராணுவ இலக்கைத் தர்கியதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம், பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை.

Share
தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...