7 10
இலங்கைசெய்திகள்

உங்களுக்கு வெட்கமில்லையா..! அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த ஹர்ஷ

Share

பொருளாதார வளர்ச்சி வீதம் 3.5 சதவீதத்தால் குறைவடையும் என கூறுவதற்கு அரசாங்கத்திற்கு வெட்கமில்லையா என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வினவியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(08.05.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“2048ஆம் ஆண்டளவில் அபிவிருத்தி நாடாக மாற வேண்டும் என்றால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஆண்டிற்கு 8 தொடக்கம் 9 வீதமாக இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார்.

அப்போது, இலங்கை விரைவாக அபிவிருத்தி அடைந்த நாடாக மாற வேண்டும் என தேசிய மக்கள் சக்தியினர் விமர்சித்திருந்தனர்.

எனினும், தற்போது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எதிர்வரும் ஆண்டுகளில் வீழ்ச்சியடையும் என அரசாங்கம் கூறுகின்றது. இவ்வாறு கூற உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றால் உங்களின் பொருளாதார மாதிரியை நீங்கள் மாற்ற வேண்டும்.

எனினும், இந்த அரசாங்கத்திற்கு பொருளாதார மாதிரியை மாற்றினால் எந்த பொருளாதாரத்திற்கு செல்வது என்பது குறித்து தெரியாது” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...