6 8
இலங்கைசெய்திகள்

மருத்துவமனை ஊழியர்களைத் தாக்கிய நோயாளி கைது

Share

குளியாப்பிட்டிய மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மருத்துவமனை ஊழியர்களைத் தாக்கிய நோயாளியொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நோயாளி குளியாப்பிட்டிய மருத்துவமனையின் முதலாம் விடுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் அவர் அதற்கடுத்த இரண்டு நாட்களும் மருத்துவமனை ஊழியர்கள் இருவரைத் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான ஊழியர்கள் இரண்டு ​பேரும் தற்போதைக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து குறித்த நோயாளியை விடுதியிலிருந்து இருந்து வெளியேற்றிய மருத்துவர்கள், அவரது அடாவடித்தனங்கள் குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் குறித்த நோயாளியை கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...