4 7
இலங்கைசெய்திகள்

தேர்தல் பணிக்காக சென்ற இளம் பெண் அரசாங்க அதிகாரி உயிரிழப்பு

Share

கண்டி, பேராதனை பொலிஸ் பிரிவில் உள்ள கன்னொருவ ஆரம்ப பாடசாலையில் தேர்தல் பணிக்காகச் சென்ற அரசாங்க பெண் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதிகாரிக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக பேராதனை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் நேற்று மாலை 5 மணியளவில் தேர்தல் பணிக்காக வருகைத்தந்திருந்தார்.

குறித்த அதிகாரி கன்னொருவ தாவர மரபணு வள மையத்தில் மேம்பாட்டு அதிகாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கலகெதர, மினிகமுவ பகுதியைச் சேர்ந்த கிருஷாந்தி குமாரி தசநாயக்க என்ற 33 வயதுடையவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 18
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: இரவு நேரக் கட்டுப்பாடுகள் அமுல்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாகச் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை...

world 17
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு 27 புதிய அதிபர்கள் நியமனம்!

மத்திய மாகாணத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், தகுதியானவர்களுக்குப் புதிய நியமனங்கள் வழங்கும்...

world 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். விவசாயக் குழுக் கூட்டம்: தன்னிறைவு அடைந்துள்ள மாவட்டத்தின் உற்பத்தி நிலை குறித்து அரசாங்க அதிபர் பெருமிதம்!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்...

world 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லிட்ரோ எரிவாயு விலை அதிரடி உயர்வு: புதிய விலைப் பட்டியல் இதோ!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை மற்றும் கப்பல்...