23
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு அவசர சத்திர சிகிச்சை : அவரின் வீட்டில் குவியும் அரசியல்வாதிகள்

Share

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அவசர சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

வலது காலில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் அவரது இடது காலில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இடது காலில் சிரட்டையை அகற்றி புதிய சிரட்டை வைப்பதற்கான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

தற்போது மகிந்தவின் வலது காலில் உள்ள சிரட்டையை அகற்றி புதிய சிரட்டையை பொருத்தும் சத்திர சிகிச்சையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சத்திர சிகிச்சையின் பின்னர் மகிந்த தனது வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த செய்தியை கேள்விப்பட்ட பல அரசியல்வாதிகள் கட்சி பேதமின்றி முன்னாள் ஜனாதிபதியின் நலம் விசாரிப்பதற்காக அவரின் வீட்டிற்கு செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...