9 2
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியாக ரணில் அல்லது சஜித்: அரச தரப்பில் இருந்து வந்த செய்தி..

Share

இந்த வருட இறுதிக்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அல்லது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரில் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்கள் என்பது ஒரு கட்டுக்கதை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஒகஸ்ட் மாதமளவில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என சிலர் கூறிவருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், டிசம்பரில் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என எதிர்க்கட்சி நாடளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தமையையும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இது போன்ற விடயங்கள் வேறொரு பிரபஞ்சத்தில் மட்டுமே சாத்தியம் என ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கருத்துக்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பயனளிக்குமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, இந்த அரசாங்கத்தை வீழ்த்த நினைக்கும் எவரும் எங்களை விட திறன் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

அதனை மேற்கோள்காட்டிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, வேறொருவர் ஆட்சிப் பீடம் ஏறுவதற்கான ஒரே வழி இது தான் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை குறித்து மக்கள் சந்தேகம் கொள்ள தேவையில்லை என்பதையும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...