3 2
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலியாவுக்கான மாணவர் விசா கட்டணத்தில் மாற்றம்

Share

அவுஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி, தேர்தலில் வெற்றிபெற்றால் சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், சர்வதேச மாணவர் விசாக்களுக்கான கட்டணத்தை 710 அவுஸ்திரேலிய டொலர்களில் இருந்து 1,600 டொலர்களாக அவுஸ்திரேலிய அரசாங்கம் இரட்டிப்பாக்கியது.

தற்போது இதனை மீண்டும் அதிகரிப்பதாக ஆளும் தொழிலாளர் கட்சியும் பிரதான எதிர்கட்சியும் உறுதிமொழி வழங்கியுள்ளது.

முன்னதாகவே, அவுஸ்திரேலியாவின் பழமைவாத எதிர்ப்பு கட்சி, விசா கட்டணத்தை குறைந்தபட்சம் 2,500 முதல் 5,000 அவுஸ்திரேலிய டொலர்களாக அதிகரிப்பதாக உறுதியளித்திருந்தது.

சர்வதேச மாணவர்கள், அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் வருமானத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளனர்.

ஆனால், அதிகளவான சர்வதேச மாணவர்களின் வருகை, அவுஸ்திரேலியாவில் சுகாதார மற்றும் ஏனைய பொதுச் சேவைகளின் செலவுகளையும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் 1 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...