2 1
இலங்கைசெய்திகள்

கம்பன்பிலவை கண்டு அச்சமடைந்த பிள்ளையான்!

Share

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் சிறைச்சாலையில் வைத்து அழுததாக கூறப்பட்டமையானது, உதய கம்பன்பில அவரது சட்டத்தரணி ஆகியதனால் வெளிவந்த அச்சத்திலேயே என ஜேவிபி- யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா சாடியுள்ளார்.

பேருவளையில் இடம்பெற்ற விசேட மக்கள் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பிள்ளையானின் வழக்கானது, சட்டத்தரணி உதய கம்மன்பில பேசும் முதல் வழக்காக இருக்கும். ஒருவேளை அது கடைசி வழக்காகவும் இருக்கலாம்.

பிள்ளையானை அழைத்து வந்தபோது என்ன நடந்தது? முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தொலைபேசியிலிருந்து அழைப்பை மேற்கொண்டு, அவரிடம் தொலைபேசியைக் கொடுக்குமாறு சிறைஅதிகாரியிடம் கேட்டுள்ளார்.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மட்டுமே பிள்ளையைச் சந்திக்க முடியும். இவர்கள் நெருங்கிய உறவினர்கள் அல்ல.

அப்படியானால் அடுத்த வாயப்பு முறை என்ன, சட்டத்தரணி என்ற அடிப்படையே?

கம்பன்பில ஒரு சட்டத்தரணி என்றாலும், நாமல் ராஜபக்சவைப் போல அவர் தனது வாழ்க்கையில் ஒருபோதும் நீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் வாதிட்டதில்லை.

யாரோ ஒருவர் நகைச்சுவையாக பேஸ்புக் பக்கத்தில் இடுகையிடப்பட்டிருப்பதைக் கண்டேன்.

பிள்ளையான் ஏன் அழுதார்? அதாவது பிள்ளையானின் சட்டத்தரணி உதய கம்மன்பில என்பதை அறிந்தவுடனேயே அவர் அழுதார். வழக்கு தோற்கடிக்கப்படும் என்ற பயத்திலேயே அவர் அழுதார் என அந்த பதிவாளர் கருத்து தெரிவித்திருந்தார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...