2 7
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி

Share

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி(narendra modi) எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு (sri lanka) பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக இலங்கை வட்டார தகவல்களின்படி, இந்தப் பயணம் இன்னும் வலுவடைந்து வருவதாகவும், ஏப்ரல் 5 ஆம் திகதி அளவில் பயணம் இடம்பெறக்கூடும் என்றும், இணைப்பு மற்றும் பொருளாதார உறவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் பயணத்திற்கான அழைப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(anura kumara dissanayake) 2024 டிசம்பர் நடுப்பகுதியில் புதுடில்லிக்கு மேற்கொண்ட இரண்டு நாள் பயணத்தின் போது விடுத்திருந்தார்.

2024 செப்டம்பரில் அநுர குமார, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பயணத்தின் போது, ஏழு கடன் திட்டங்களுக்கான 20 மில்லியன் டொலர் கொடுப்பனவுகளை மானியங்களாக மாற்றுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்தது, இது இலங்கையின் கடன் சுமையைக் குறைத்தது.

2022 ஆம் ஆண்டு நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது டில்லி கொழும்புக்கு அளித்த 4 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆதரவை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...