2 7
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி

Share

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி(narendra modi) எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு (sri lanka) பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக இலங்கை வட்டார தகவல்களின்படி, இந்தப் பயணம் இன்னும் வலுவடைந்து வருவதாகவும், ஏப்ரல் 5 ஆம் திகதி அளவில் பயணம் இடம்பெறக்கூடும் என்றும், இணைப்பு மற்றும் பொருளாதார உறவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் பயணத்திற்கான அழைப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(anura kumara dissanayake) 2024 டிசம்பர் நடுப்பகுதியில் புதுடில்லிக்கு மேற்கொண்ட இரண்டு நாள் பயணத்தின் போது விடுத்திருந்தார்.

2024 செப்டம்பரில் அநுர குமார, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பயணத்தின் போது, ஏழு கடன் திட்டங்களுக்கான 20 மில்லியன் டொலர் கொடுப்பனவுகளை மானியங்களாக மாற்றுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்தது, இது இலங்கையின் கடன் சுமையைக் குறைத்தது.

2022 ஆம் ஆண்டு நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது டில்லி கொழும்புக்கு அளித்த 4 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆதரவை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...