9 3
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விநியோக செயல்முறையை சீர்குலைக்க முயற்சி! விசாரணையை ஆரம்பித்துள்ள சிஐடி

Share

நாட்டின் எரிபொருள் விநியோக செயல்முறையை சீர்குலைக்க முயற்சித்ததாகக் கூறப்படும் முறைப்பாடு குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

எரிபொருள் விநியோகஸ்தர்கள் என்று கூறும் சில நபர்கள் இதன் பின்னணியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு மக்களை பதற்ற நிலையில் வைத்திருக்க முயற்சிகளை எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த சில நாட்களாக எரிப்பொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் நீண்ட வரிசையில் உள்ளனர்.

இந்நிலையில் எரிபொருளுக்கு தட்டுபாடு நிலவுவதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

இதனால் மக்கள் மீண்டும் வரிசையுகம் ஆரம்பிக்கப்படுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர். இந்தநிலையிலே காவல்துறையினர் இவ்வாறான தகவலொன்றினை வெளியிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...