21 2
உலகம்செய்திகள்

போர்நிறுத்த நீட்டிப்பை ஏற்க மறுத்த ஹமாஸ்..இஸ்ரேலின் பதிலடி!

Share

போர்நிறுத்த நீட்டிப்பை ஏற்க மறுத்த ஹமாஸ்..இஸ்ரேலின் பதிலடி!

போர்நிறுத்த நீட்டிப்பை ஹமாஸ் ஏற்க மறுத்ததையடுத்து, காசாவுக்குள் செல்லவிருந்த அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் தடுத்துள்ளது.

எகிப்து, கட்டார், அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைமையில் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், கடந்த சனிக்கிழமை(01.03.2025) காலாவதியானது.

இதனையடுத்து, போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் அமெரிக்காவின் திட்டத்திற்கு ஹமாஸ் இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், ஹமாஸ் சம்மதிக்கும் வரை காசாவுக்குள் அனுப்பப்படும் உதவிகள் நிறுத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

ஹமாஸ் இந்த நடவடிக்கையை ஒரு மிரட்டல் என தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 19ஆம் திகதி தொடங்கிய முதல் கட்ட போர் நிறுத்தம் எந்த முன்னேற்றமும் இன்றி முடிவுக்கு வந்தது. அடுத்த கட்டம் சில வாரங்களுக்கு முன்பே தொடங்கியிருக்க வேண்டும் என்ற போதிலும் அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை.

இந்நிலையில், முன்மொழியப்பட்ட போர்நிறுத்த நீட்டிப்புக்குப் பிறகு பேச்சுவார்த்தை தோல்வியுற்றால், இஸ்ரேல் மீண்டும் போருக்குத் திரும்பக்கூடும் என்று நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...