இலங்கைசெய்திகள்

பாதாள உலகக் குழுவினருடன் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தொடர்பு! பகிரங்கப்படுத்திய அநுர தரப்பு

Share
16
Share

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றச்செயல்களைச் செய்யும் பொருட்டு பாதாள உலக குழுக்களை பயன்படுத்தியுள்ளதாகக் பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடகல குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, ‘கோனவல சுனில்’ என்ற பாதாள உலக உறுப்பினரை பயன்படுத்தி, உச்ச நீதிமன்ற நீதிபதியின் வீட்டின் மீது கற்கள் வீச வைத்தார்,” என அவர் தெரிவித்துள்ளார்.

மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, பாதாள உலக தலைவர்களை வழிநடத்தி, ஊடகவியலாளர் ரிச்சர்ட் டி சொய்சாவை கடத்திச் சென்று படுகொலை செய்தார் என குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில், ரிச்சர்ட் டி சொய்சா பற்றிய ‘ராணி’ திரைப்படம் வெளியிடப்பட உள்ளது எனவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த திரைப்படத்தை ரகசியமாக பார்வையிட்டு, அவருடைய தந்தை ஜனாதிபதி பதவியில் இருந்தபோது என்ன நடந்தது என்பதைக் கண்டறியுமாறு கோருவதாக சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜுலம்பிட்டியே அமரே மற்றும் வம்பொட்டா போன்ற பாதாள உலக உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார் என மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜுலம்பிட்டியே அமரே, ஒருகாலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவர்களின் பாதுகாப்பாளராகவும் பணியாற்றினார்,” என சுனில் வடகல நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...