20 13
இந்தியாசெய்திகள்

சீமான் வீட்டில் கடும் குழப்பம்:பொலிஸாரை நோக்கி துப்பாக்கியை ஏந்திய காவலாளி

Share

சீமான் வீட்டில் கடும் குழப்பம்:பொலிஸாரை நோக்கி துப்பாக்கியை ஏந்திய காவலாளி

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) வீட்டில் பொலிஸார் ஒட்டிய அழைப்பாணை கிழிக்கப்பட்டதில் காவலாளிக்கும் பொலிஸாருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், பொலிஸாரை நோக்கி துப்பாக்கியை ஏந்திய காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், அழைப்பாணை ஒட்டி சில நிமிடங்களில் சீமான் வீட்டில் இருந்து வந்த நபரொருவர் அதனைக் கிழித்துள்ளார்.

நடிகர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைக்கு சீமான் முன்னிலையாகாததால் பொலிஸாரால் இந்த அழைப்பாணை ஒட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நாளை (28) காலை 11 மணிக்கு வலசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு பொலிஸார் அந்த அழைப்பாணையில் குறிப்பிட்டிருந்தனர்.

தற்போது, விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் சீமானை கைது செய்ய நேரிடும் எனவும் பொலிஸார் ஒட்டிய அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த அழைப்பணையை கிழித்த சீமானின் காவலாளிக்கும் பொலிஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சீமானின் மனைவி பொலிஸாரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...