7 54
இலங்கைசெய்திகள்

கோட்டாவிற்கு பாதுகாப்பு செயலாளர் பதவியை வழங்குமாறு கோரிக்கை

Share

கோட்டாவிற்கு பாதுகாப்பு செயலாளர் பதவியை வழங்குமாறு கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பாதுகாப்பு செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டுமென சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் கடந்த காலங்களில் நாட்டில் சகல விடயங்களிலும் நேரடியான தீர்மானங்களை மேற்கொண்டதால் அவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது.

அவர்கள் எங்கள் தலைவர்கள். அவர்களின் உயிர் ஆபத்தில் இருப்பது குறித்து நாம் அஞ்சுகிறோம்.

கடந்த காலத்தில், இவை அனைத்திற்கும் எதிராக தைரியமாகவும் நேரடியாகவும் முடிவுகளை எடுத்த தலைவர்களை தற்போது சாடாதீர்கள்.

நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை கோட்டாபயவிற்கு வழங்கி அவருக்கு ஒரு மாதம் கால அவகாசம் கொடுங்கள். அவர் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து காட்டுவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...