1 49
இலங்கைசெய்திகள்

பழிவாங்கப்படும் ராஜபக்சர்கள்! பாதாள குழுக்கள் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டு

Share

தற்போதைய அரசாங்கம் தமது இயலாமையை மறைத்துக் கொள்வதற்கு பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பான பழி ராஜபக்சர்கள் மீது சுமத்தப்படுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறைகளையும், அச்சுறுத்தலையும் அரசாங்கம் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது என்றும், நாமல் ஊருக்கு சென்றால் புதைகுழிக்கு செல்ல நேரிடும் என்று அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளமை மிகவும் பாரதூரமானது எனவும் கூறியுள்ளார்

அவர் மேலும், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல சிறந்த திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அவற்றை தற்போது குறிப்பிடப்போவதில்லை. ஏனெனில் அவற்றை ஆளும் தரப்பின் 158 உறுப்பினர்கள் குறிப்பிடுவார்கள்.

குறைகளை சுட்டிக்காட்டுகிறேன். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் 69 இலட்ச மக்களாணையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் எதிர்வரும் ஓரிரு மாதங்களில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைப்பெறவுள்ளது. கடந்த காலங்களில் பொதுஜன பெரமுன பற்றி பேசப்படவில்லை. ஆனால் தற்போது அதிகளவில் பேசப்படுகிறது.

அரசாங்கம் எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல்களை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் ஒருவர் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கிராமத்துக்குச் சென்றால் புதைகுழிக்கு செல்ல நேரிடும் என்று குறிப்பிடுகிறார்.

பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இந்த பழியையும் அரசாங்கம் கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்துகிறது.

இது மிகவும் பாரதூரமானது. இது பத்தரமுல்லை அலுவலகத்தின் திட்டமா, மக்கள் விடுதலை முன்னணியின் உண்மையான முகம் தற்போது வெளிவருகிறது” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...